Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தொடர் மழையால் சோகத்தில் சோகத்தூர் விவசாயிகள்.


தர்மபுரி அருகே சோகத்தூரில், ஓசூர் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 50 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்கள் சமீபத்தில் பெய்த மழைக்கு நீர் தேங்கி நின்று அழுகிவிட்டதால், வடிகால் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர் வரையில் சோகத்தூர் வழியாக 4 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக சோகத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையை ஒட்டிய விவசாயிகளிடமிருந்து சுமார் 100 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் ஏரியை ஒட்டியபடி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. சோகத்தூர் ஏரிக்கும் 4வழி தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள 50 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல், சோளம், தட்டை, வாழை, சம்பங்கி பூ ஆகியவை பயிரிட்டுள்ளனர். 


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் 50 ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. இதனால் பயிரிட்டுள்ள நெல், சோளம், தட்டை, வாழை, சம்பங்கி பூ உள்ளிட்ட அனைத்து பயிர்களும் அழுகி விட்டன. இதனால் உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என சோகத்தூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


இது குறித்து சோகத்தூர் விவசாயிகள் கோவிந்தன், நஞ்சப்பன், கிருஷ்ணன், சின்னசாமி, தீர்த்தகிரி, கணேசன், சுப்ரமணி, சம்பத் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையை ஒட்டி சுமார் 150 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த சோகத்தூர் கிராமத்தின் வழியாக தேசிய 4 வழி நெடுஞ்சாலை செல்வதால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விரிவாக்கப்பணிக்காக எங்களிடம் இருந்து சுமார் 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திவிட்டனர். இதற்கென உரிய இழப்பீடும் தராமல் குறைவான இழப்பீடும் தந்துள்ளனர். எங்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. 




இதனால் எங்களிடம் எஞ்சிய 50 ஏக்கர் நிலம் சோகத்தூர் ஏரிக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே அமைந்துவிட்டது. நிலம் கையகப்படுத்தும் போதே அதிகாரிகளிடம் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என மனு அளித்தோம். கடந்த ஒரு வருடமாக வடிகால் அமைத்து தருவதாக கூறி வந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒரு சில நாட்கள் பெய்த கோடை மழைக்கே எங்களது நிலங்களில் பெய்யும் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமாகிவிட்டன. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ரூ10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக  வழங்க வேண்டும். எங்கள் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தரா அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒரு சில நாட்கள் பெய்த கோடை மழைக்கே எங்களது நிலங்களில் பெய்யும் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அனைத்தும் அழுகி சேதம ரசிவிட்டன. இதனால் ஒவ்வொரு விவச யிக்கும் சுமார் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எங்கள் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும் இவ்வாறு கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884