அன்னசாகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுப்பிரமணிய சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாக அருகில் உள்ள இடத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வீடு கட்டி பல தலைமுறைகளாக, தற்போது வரை வசித்து வருகின்றனர்.
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவலகங்களில் சிலர் மனு கொடுத்துள்ளனர். இதனால் தருமபுரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் அன்னசாகரம் பகுதி குடியிருப்புகளின் பத்திரப் பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்து சில மாதங்களுக்கு முன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் இந்த பகுதிகளில் விசாரணை செய்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இடம், அறநிலைத்துறைக்குச் சொந்தமானது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.