Type Here to Get Search Results !

அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பணி தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சி, பப்பிரெட்டியூர் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 13.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் நிதியை ஒதுக்கீடு செய்து, பணி தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினார். 

அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி, சாமியார்கொட்டாய் பகுதியில் ரூபாய் 9.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சிகளில், மின்சார உதவி செயற்பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் பாலமுரளி, மாநில செயற்குழு உறுப்பினர், பெ.பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் – மாது, வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் சதிஷ், ஒன்றிய தலைவர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் இராஜா, நிர்வாகிகள் - சரவணன், பாண்டுரங்கன், கல்யாணசுந்தரம், பழனி, ரங்கநாதன், தம்பிதுரை, கே.ராசேந்திரன், அன்பழகன், சக்திவேல், செல்வம், ரத்தினவேல், குணசேகரன், மின்சார ஊழியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies