Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

திமுக அரசின் பால், சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Top Post Ad


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திமுக அரசின் பால் விலை, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஒன்றிய தலைவர்கள் சிவனாதன் (கிழக்கு) மற்றும் கோபி (மேற்கு)  தலைமையில்  அமானி மல்லாபுரம் பஸ் நிலையம் அருகிலும், புலிகரை பஸ் நிலையம் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் துணைத் தலைவர் பாடி முரளி. கலந்து கொண்டு கண்டன உரையை துவக்கி வைத்தார்.


பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துனைத் தலைவர் பி.கே.சிவா முன்னிலை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால், மின்சாரம், சொத்து வரி உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல்   மக்கள் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு மக்களை மேலும் சிரமத்திற்கே ஆளாக்கி உள்ளது.


எனவே உடனடியாக சொத்து வரி, பால் விலை, மின்கட்டண விலை உயர்வை ரத்து செய் அல்லது பதவியை ராஜினாமா செய் என ஆக்ரோஷமாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், முன்னாள் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் சண்முகம், ஒன்றிய பொது செயலாளர்கள் கிருஷ்ணன், முருகன்,  முன்னாள் மாவட்ட விவசாய அணி  தலைவர்  முனுசாமி, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக  கலந்து கொண்டனர்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884