
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகாவதி அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதன அள்ளி ஊராட்சி, சந்தனூரான் கொட்டாய் பகுதியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் 88 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் பாலக்கோடு சின்னாறு அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பள்ளி ஊராட்சி, சின்னாறு பகுதியில் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதன அள்ளி ஊராட்சி, கெட்டுப்பட்டி கிராமத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், பாலஜங்மன அள்ளி ஊராட்சி, இருசன்கொட்டாய் பகுதியில் ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுவினரின் பயன்பாட்டிற்காக மகளிர் பணி கூட்டரங்க கடட்டம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், சங்கன் கொட்டாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டுக்கூடு உற்பத்தி கூடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.14 இலட்சம் மதிப்பீட்டில் பஞ்சப்பள்ளி ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ.15.47 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதையும், பெலமாரன அள்ளி ஊராட்சியில் ரூ.90.00 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, அனைத்து பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு அணை முகாம், தருமபுரி வட்டம், மதிகோன்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பென்னாகரம் வட்டம், நாகாவதி அணை முகாம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி அணை முகாம், பாலக்கோடு வட்டம், கெசர்குளி அணை முகாம், சின்னார் அணை முகாம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணை முகாம், அரூர் வட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய 8 இடங்களில் அமைந்துள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 2417 நபர்கள் வசித்து வருகின்றார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் நாகாவதி அணை முகாம், பாலக்கோடு வட்டத்தில் கெசர்குளி அணை முகாம், சின்னாறு அணை முகாம் ஆகிய இடங்களில் ரூ.10.91 கோடி மதிப்பீட்டில் 218 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, பாலக்கோடு சின்னாறு அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டுவதற்கும், கெசர்குளி அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டுவதற்கும், மற்றும் நாகாவதி அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் 88 வீடுகள் கட்டுவதற்கும் அரசிடமிருந்து பெறப்பட்ட வரைப்படங்களின் அடிப்படையில் 300 சதுரடி கொண்ட ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளுக்கு ரூ.5.00 இலட்சம் வீதமும், 300 சதுர அடி கொண்ட தனி வீட்டிற்கு ரூ.5.65 இலட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடு கட்டும் பணிகள் போர்கால அடிப்டையில் நடைபெற்று வருகின்றன. மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பாலக்கோடு வட்டம், கெசர்குளி அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.90.00 ஆயிரம் மதிப்பீட்டில் கைபம்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும், சின்னார் அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.1.06 இலட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியும், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.3.77 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள், கழிவறைகள் பராமரிக்கும் பணிகளும், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.47 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.1.94 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள், கழிவுநீர் கால்வாய் அமைக்கம் பணிகளும் என தருமபுரி மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் ரூ.8.14 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் இதர பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி, விரைந்து முடித்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட ஊரக வளரச்சி முகமை செயற்பொறியாளர் திரு.முத்துசாமி, தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜசேகர், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் திரு.பாலமுருகன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.எம்.ஷகிலா, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுருளிநாதன், திரு.ரவி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக