Type Here to Get Search Results !

வனப்பாதுகாப்பிற்கு கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையின் மூலம் 24x7 கட்டணமில்லா தொலைபேசி சேவையானது 1800 4254 586 என்ற எண்ணில் துவங்கப்பட்டுள்ளது. இச்சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் வனப்பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் மரங்கள் வெட்டுதல் மற்றும் கடத்தல், தீ அபாயங்கள், வனவிலங்குகளை வேட்டையாடுதல், கள்ளதுப்பாக்கி வைத்திருத்தல், வன நிலம் ஆக்கிரமித்தல், மணல் கடத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், பட்டி அமைத்தல் முதலிய வனக்குற்றங்கள் பற்றி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும்.  மேலும், காப்புக்காட்டிலிருந்து வன விலங்குகள் வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைதல், மனித-விலங்கு மோதல்கள், வன விலங்குகளால் பயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுதல், பட்டா நிலத்திலுள்ள கிணற்றில் வன விலங்குகள் வழி தவறி விழுதல் போன்ற வனத்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் இத்தொலைபேசி எண்ணிற்கு தெரிவிப்பதன் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டிய விடுமுறை நாட்களில் வனப்பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல் போன்ற குற்றங்கள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளதால், அவற்றை தவிர்க்கும் பொருட்டும், அவ்வாறான குற்றங்கள் ஏதேனும் நடைபெறுவது தெரியவந்தால் அதைப்பற்றி 24x7 கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 4254 586 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி வனக்கோட்டம், மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884