Type Here to Get Search Results !

மாநில கல்விக்கொள்கை கருத்துகேட்பு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்.

தமிழகத்தில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக்கொள்கை வகுப்பதற்காக மாண்புமிகு. த. முருகேசன், (புதுதில்லி உயர்நீதி மன்றம் முன்னாள் நீதியரசர்) அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. 

உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மாநில கல்விக்கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கிடையே மாநில கல்விக்கொள்கை கருத்து கேட்புக்கூட்டம் வருகின்ற 28.10.2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் மாநில கல்விக்கொள்கை தொடர்பான தங்களது எழுத்து பூர்வமான கருத்துக்களை 26.10.2022 மாலை 05.00 மணிக்குள் தங்கள் முகவரி மற்றும் கைப்பேசி எண் விவரத்துடன் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies