ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அப்பணிகள் முடியும் வரை ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு அனுமதியில்லை.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (17.09.2022) காலை நிலவரப்படி 28,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாலும் இன்று (17.09.2022) சனிக்கிழமை முதல் ஒக்கேனக்கலில் பரிசல்கள் இயக்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சி பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அப்பணிகள் முடியும் வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு அனுமதியில்லை.
மேலும், பரிசல்களை இயக்கும் பரிசல் ஓட்டிகள், பரிசல்களில் பயணிகளை ஏற்றி செல்லும் போது பாதுகாப்பு கவச உடை (Life Jacket) அணிவித்து பாதுகாப்பாக பரிசல்களை இயக்க வேண்டும், மேலும் அரசின் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
