தமிழகத்தின் மரமான பனை மரத்தின் முக்கியதுவத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையோடு கடந்த ஆண்டு மிதிவண்டி பயணத்தை தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் துவங்கினர்.
விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட இந்த பயணம் திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருட்டிணகிரி மற்றும் தருமபுரி வரையில் சென்றது. கொரோனா ஊரடங்கால் அந்த பயணத்தை முதற்கட்ட பயணமாக அத்துடன் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் இருந்து இரண்டாம் கட்ட மிதிவண்டி பயணத்தை துவங்கினர். தருமபுரி மாவட்டத்தின் சமூக சேவகர்கள் சார்பில் இப்பனை பயணம் துவங்கப்பெற்றது. இதில் நாங்கள் உங்களுக்காக அறக்கட்டளை (V4U Trust) மற்றும் சமூகத்தின் நண்பர்கள் அறக்கட்டளை (FOS Trust) நிர்வாகிகள் கலந்து கொண்டு வழியனுப்பி வைத்தனர், இப்பயணத்தை பனையேறி பாண்டியன் அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்.


