ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடக்கும் கிராம மக்கள்; பாலம் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஆகஸ்ட், 2022

ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடக்கும் கிராம மக்கள்; பாலம் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டம், அரக்காசஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிமுத்தனூர், பாலிக்காடு, மண்ணப்பன்கொட்டாய் ஆகிய கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை சுற்றிலும் மூன்று பக்கமும் நாகாவதி ஆறு சூழ்ந்து செல்வதால் இந்த பகுதி தீபகற்பம் போல காணப்படுகிறது.

இந்த கிராம உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வர் என அனைவரும் கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வெற்றிகாணப்படும் எனவே அவர்கள் ஆற்றை கடந்து செல்வவது வழக்கம், மழைக் காலங்களில் நாகாவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பொழுது இப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. 

மேலும் இந்த பகுதிகளுக்கு மூன்று அரசு நகர பேருந்துகள் வருகிறது. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் வேலைக்கு செல்வதற்கு இந்த ஆற்றை கடந்து தான் செல்லும் நிலை உள்ளது, மழைக் காலங்களில் பொதுமக்கள் இந்த ஆற்றை கடக்க முடியாமல் மிகுந்த சகரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

ஆனால் இந்த மழைக் காலங்களில், இப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், மேலும் பள்ளி மாணவர்கள் மாற்று உடையில் வந்து, ஆற்றை கடந்து சென்று, பிறகு முடுபுதர்கள் அருகே நின்று சீருடை மாற்றி செல்கின்றனர்.

இதனால் கடந்த நான்கு தலைமுறைகளாக இந்த பகுதியில் பாலம் கட்டி தர வேண்டுமென கிராமமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும், இதனால் வரை அப்பகுதிக்கு ஆற்றில் குறுக்கே பாலம் அமைக்கப்படவில்லை. மேலும் ஆற்றில் ஆழம் குறைவான பகுதியில் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க வயிறு கட்டி அதை பிடித்து தான் ஆற்றை காட்டுகின்றனர்.

அப்பகுதியில் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்பொழுது ஆற்றில் அதிக அளவு வெள்ளம் சென்று வருவதால் பள்ளிக்கு நேரத்திற்கு செல்வதற்காக வேறு வழி இல்லாமல் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர், எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாகாவதி ஆற்றில் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.