Type Here to Get Search Results !

பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கும் பணி பூமி பூஜை நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் பிரபலமானது, ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோணியார் அருள் மற்றும்ஆசி பெற்று செல்வர். இந்த சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் புரனமைக்கும் பணி சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில்  தற்போது நடைபெறுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் தர்மபுரி மறை மாவட்ட பொருளாளர் மாவட்ட சொத்து பாதுகாவலர் அருட்தந்தை சூசை ராஜ் தலைமை தாங்கி புதுப்பிக்கும் பணிக்கான பணியை துவக்கி வைத்தார் 

இந்தப் பணியின் மூலம் பக்தர்கள் வந்து தங்கி செல்வதற்கான தங்கும் விடுதிகள்,  கோவில் வளாகத்தில் உள்ள தரைதலங்களில் கற்களை கொண்டு புதுப்பித்தல், சுற்றுச்சுவர் கோவில் வளாகத்தில் இல்லாத பகுதிகளில் சுற்று சுவர் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ். பங்கு தலைவர் எம். எஃப் .ரமேஷ். செயலாளர் ஜோ. லூயிஸ் .பொருளாளர் அந்தோணி . பங்கு பேரவை உறுப்பினர் ராஜாமணி.மற்றும் பூர்ணநாதன். பிரேம். அன்பு பங்கு பேரவை உறுப்பினர்கள் ஏராளமானோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இந்த பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிப்பதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies