Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளியில் சுடுகாடு கேட்டு சாலை மறியல்.

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ளது பெரியானூர் கிராமம், இக்கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு தனியாக சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களை வீட்டிற்கு அருகிலேயே புதைத்து வந்தனர், கடந்த 30 வருடமாம் சுடுகாடு கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னப்பன் (வயது. 52) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார், அவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் அப்பகுதி மக்கள் தனி சுடுகாடு கேட்டு நேற்று காலை பஞ்சப்பள்ளி - மாரண்டஅள்ளி சாலையில் பெரியானூர் அருகே தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன் விரைவில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார், அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இறந்த சென்னப்பன் உடலை காலணிலேயே அடக்கம் செய்தனர்,  தீடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, சுடுகாடு கேட்டு சாலை மறியல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies