Type Here to Get Search Results !

செல்போனில் ஆன்லைன் விளையாட்டு: நகையை அடகு வைத்து பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகலஹள்ளி அடுத்த குரும்பட்டி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 20). இவர் பிளஸ்-2 படித்து விட்டு நீட் பயிற்சி மையத்துக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் வெங்கடேஷ், செல்போனில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த நகையை எடுத்து ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்துள்ளார். இதில் ஆன்லலைன் கேமில் அடகு வைத்த பணத்தை வெங்கடேஷ் இழந்துள்ளார்.

இதனால் வெங்கடேஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்த வெங்கடேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிபேஸ்டை தின்றார், இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies