01.05.2022 அன்று மே தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்கள் அனைத்தும் 30.04.2022 இரவு 10.00 மணி முதல் 02.05.2022 காலை 12.00 மணி வரை மூடிவைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.
மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.