Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பள்ளி கழிவறைக்கு நீர் நிரப்பும் பள்ளி மாணவர்கள்.

பாலக்கோடு அருகே  கீழ் நிலை தொட்டியில் இருந்து பள்ளி கழிவறைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மாணவர்கள் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கும்மனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இப்பள்ளியில் சுமார் 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களே கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச் சென்று பள்ளி மற்றும்  கழிவறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் கீழ்தள தண்ணீா் தொட்டில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரை குடத்தில் எடுத்து கொண்டு பள்ளியில் உள்ள கழிவறையில் ஊற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

மாணவா்கள் தொட்டியில் விழுந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ள தண்ணீா் தொட்டியில் ஆபத்தை உணராமல் தண்ணீா் கொண்டு செல்கின்றனா். இந்த வீடியோ தற்போது சமுகவலைதளங்களில் வெளியாகி பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies