தருமபுரி மாவட்டத்தில் 3,84,871 பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மொத்தம் 3,46,000 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகின்ற 8.11.2021 முதல் 28.11.2021 முடிய 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள 4 மாத வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி வருகின்ற 29.11.2021 முதல் 8.12.2021 முடிய கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களின் கைபேசி எண்கள் 9445001113, 9445032563, 9047042773, 9080536620 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
இக்கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவது குறித்து கால்நடை வளர்போருக்கு உரிய தகவல்களை முன்கூட்டியே தெரியப்படுத்திட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்போர் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளை இக்கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்துச் சென்று கட்டாயம் கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் கால்நடை பாரமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். எஸ். இளங்கோவன், துணை இயக்குநர் டாக்டர் கே.வேடியப்பன் உட்படதொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.