Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மார்ச் 2017 - செப்டம்பர் 2018 வரையிலான மேல்நிலைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 30.11.2021க்குள் பெற்றுக்கொள்ள வேண்டுகோள்.

தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுதல் தொடர்பான செய்திக் குறிப்பு மேல்நிலைத் தேர்வு (மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2018 வரை) சென்னை 6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான மேல்நிலைத் தேர்வுகளின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மேற்காண் பருவங்களில் தேர்வெழுதி இதுவரை அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆளறி சான்றிதழ்களுடன் (தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு / தற்காலிக மதிப்பெண் பட்டியல்) 30.11.2021 செவ்வாய்க்கிழமைக்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்ட பின்னர் தனித்தேர்வர்கள் உரிமை கோரலாகாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி: அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி - 636 705, தொலைபேசி - 04342 233812.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884