Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்டத்தில் பதிவு செய்யாமல் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தல்.

தருமபுரி மாவட்டத்தில் பதிவு செய்யாமல் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இதுகுறித்து மாவட்ட தெரிவித்துள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் மாவட்ட நிர்வாகத்தினால் முதியோர் இல்லங்கள் முதியோர் நலச்சட்டம் 2007 (ம) 2009-ன் கீழ் பதிவு செய்யப்பட்டும், மகளிர் பணிபுரியும் விடுதிகள் தமிழ்நாடு பெண்கள், விடுதிகள் மற்றும் குழந்தைகள் நல விதிகள் 2015-ன் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும். 

பதிவு செய்யாமல் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி. தொலைப்பேசி எண்: 04342-23308 அணுகி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவு செய்யாமல் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884