Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு !!

தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள் ஆணைக்குழு !!  

இந்த குழு எதற்காக செயல்படுகிறது ?

இலவச சட்ட உதவிகள் பெறுவதற்கு  தகுதியானவர்கள் யார் ? யார்? 

சட்ட உதவி பெறுபவர்களுடைய  முக்கிய தகுதிகள் என்ன?

  1. வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு செய்பவரோ சட்டப்படி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள், அப்படி உதவி பெற அந்த நபர்கள் கீழ் கண்ட தகுதிகள் பெற்றவராக இருக்க வேண்டும். 
  2. ஒருவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மற்றும் மலை வாழ்குடி பிரிவினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  3. அரசியலமைப்பு சட்டம் சரத்து 23 ல் குறிப்பிடப் பட்டுள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டோர்.
  4. பெண்கள் அல்லது குழந்தைகள்.
  5. 1995 ஆம் ஆண்டு ஊனமுற்றவர்கள் (சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ழுழுபங்கேற்பு) சட்டம் பிரிவு 2 சரத்து (1) ன் படி குறிப்பிட்டுள்ள படி உள்ள ஊனமுற்றோர்.
  6. பேரழிவு, இனக்கிளர்ச்சி, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர் பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்.
  7. தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி.
  8. சிறைக்காவலில் இருப்பவர் அல்லது பாது காப்பு இல்லம், இளம் சிறார்கள் இல்லம், மனநல மருத்துவமனை, மனநல காப்பகம் ஆகிய இடங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள்.
  9. பிரிவு 12 (எச்)  இல் குறிப்பிட்டப்படி ஆண்டு வருமானம்  ₹ 100000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)  மிகாமல் உள்ளவர்கள்.

மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்ற நபர் யாராக இருந்தாலும் , அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாய் இருந்தால், அவர்கள் வழக்கு தொடரவும், எதிர் வழக்கு நடத்தவும் இலவச சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர் ஆவார்கள்.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின்  இலவச  சேவைகள்  என்னென்ன? 

  1. சிவில் வழக்குகள் சம்பந்தமாக.
  2. குடும்பநல வழக்குகள் சம்பந்தமாக.
  3. வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமாக.
  4. குற்றவியல் வழக்குகள் நடத்துதல், மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் சம்பந்தமாக.
  5. வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது. அதாவது நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது.
  6. பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்பற்றி தெரிந்து கொள்ள.
  7. மக்கள் நீதிமன்றம் / நடுவர் அரங்கங்கள் பற்றி விழிப்புணர்வு  பெற .
  8. மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற.
  9. காசோலைகள் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து.
  10. தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து.

பொது மக்கள் அவர்களது பிரச்சனைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம், வட்ட சட்ட பணிகள் குழு அந்தந்த வட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.  தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவினையோ, அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தையோ நேரில் அணுகி உரிய நிவாரணம பெறலாம்.

இப்படி ஒரு இலவச சேவை இருப்பது  எத்தனை பேருக்கு தெரியும்.? 

உங்களது பிர்ச்சனைகளை  இந்த குழுவினர் தீர்த்து வைப்பார்கள்,  தீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தால் அவர்களே  வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் தீர்வு பெற்று தருவார்கள்.

வழக்கறிஞர் கட்டணம் உட்பட நீங்கள் எந்த ஒரு கட்டணமும்  செலுத்த தேவை இல்லை, வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும். 

மேலும், இது குறித்த சந்தேகங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அணுகுங்கள்.

தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள் ஆணைக்குழு.

வடக்கு கோட்டை சாலை,

நுழைவாயில் எண் :6, 

உயர்நீதிமன்ற வளாகம், 

சென்னை -600 104

தொலைபேசி  :044 25342834

சட்ட உதவிக்கு :044 25342441

கட்டணம் இல்லா தொலைபேசி  :1800 425 2441. 

--

தகவல் : ILF பன்னாட்டு அமைப்பு, தருமபுரி பிரிவு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884