பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி
கொரோனா இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கி தகவல்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி
தருமபுரி மாவட்டத்தில் 1.8.2021 முதல் 7.8.2021 வரை ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முதல் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், வலைதளங்களில் விழிப்புணர்வு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உள்ளூார் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், இரண்டாம் நாள் கை கழுவுதல்,முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாள், வர்த்தகர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நான்காம் நாள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஐந்தாம் நாள் இணைய வழியில் ஓவியப்போட்டி, போஸ்டர் , விழிப்புணர்வு வாசகம் தயாரிக்கும் போட்டிகள் நடத்துதல், ஆறாம் நாள் இணைய வழியில் வினாடி வினா நடத்துதல், மீம் உருவாக்குதல், தெருவோர கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், வானொலியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இன்று நிறைவு நாள் நிகழ்ச்சியாக ரங்கோலி போட்டியும் தற்போது நடைபெறும் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இருந்த பொழுதும் கொரோனா இன்னும் நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை.கொரோனா குறித்த விழிப்புணர்வு எப்போதும் இருக்க வேண்டுமே தவிர அது ஒரு நோயாக நம்முடன் இருத்தல் கூடாது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதையும், பொது இடங்களில் கூடுவதை மும் தவிர்க்க வேண்டும்.
மேலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா வை வெல்ல தடுப்பூசி ஒன்றே நமக்கிருக்கும் ஒரு ஆயுதம். தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் தவணையை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணைகளையும் முறையாக செலுத்திக் கொண்டால் தான் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி
கொரோனா இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். இந்த கொரோனா ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பேசினார்.
கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடைபெற்ற கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மீம்ஸ் போட்டி, ஸ்லோகன் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்/ திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.வைத்தியநாதன் இஆப., உதவி ஆட்சியர் திருமதி சித்ரா விஜயன் இஆப., உதவி ஆட்சியர் பயிற்சி திரு.கௌரவ் குமார் இஆப., துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ஜெமினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, துணை ஆட்சியர் பயிற்சி செல்வி பூமா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் மரு.பார்கவி, வட்டார மருத்துவ அலுவலர்கள் திரு.சிவகுரு, திரு.சரஸ்குமார், திரு.வாசுதேவன், திருமதி.அனுராதா, திரு.பாபு, திரு.கௌரிசங்கர் உட்பட கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக