Type Here to Get Search Results !

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன  ஆர்ப்பாட்டம்.!

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கான மசோதா சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஒன்றிய கழக செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். பென்னாகரம் நகர செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

இதில் பெண்ணாகரம் கூட்டுறவு சங்கத் தலைவர் கே பி ரவி,முன்னாள் ஊராட்சி செயலாளர் தமிழரசு,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தவுலத் பாஷா, முன்னாள் பேரூராட்சித் தலைவர் அஸ்மத், அம்மா பேரவை நகர செயலாளர் ஈ  சி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முனிராஜ் மற்றும் மாதவ சிங், முன்னாள் ஊராட்சி செயலாளர் மு. மணி வண்ணன் , குட்டி @ முனுசாமி நரசிம்மன் லோகநாதன் ராஜேந்திரன் லட்சுமையன் பெருமாள் ரமேஷ் சக்திவேல் முனியப்பன் தேவராஜ் கிருஷ்ணன் ராஜ்குமார் முனுசாமி மூர்த்தி அஜய் முனி செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884