நியுமோகாக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி (PCV) முகாம் ஆட்சியர் தொடக்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

நியுமோகாக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி (PCV) முகாம் ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கான நியுமோகாக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி (PCV) வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கான
நியுமோகாக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி (PCV) வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., பின்னர் மாவட்ட அவர்கள் பேசியதாவது:சுவாச 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு நியுமோகாக்கல் நிமோனியா காய்ச்சல் முக்கிய காரணமாக உள்ளது. நியுமோகாக்கல் நிமோனியா என்பது கடுமையான நோய்த் தொற்றின் ஒரு வகையாகும். இதில் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், மார்பு ஊடுருவுதல், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை ஏற்படும். 

இவை கடுமையானதாக இருந்தால், அது குழந்தையின் மரணத்திற்குக்கூட வழிவகுக்கும். மேலும், நியுமோகாக்கல் பாக்டீரியா நோய்த் தொற்றுகள் மூளைக்காய்ச்சல், இரத்தத்தில் கிருமித் தொற்று போன்ற கடுமையான ஆக்கிரமிப்பு நோய்களுக்கும் சைனசைடிஸ் போன்ற லேசான மற்றும் பொதுவான நோய்களுக்கும் வழிவகுக்கும். இருமல் அல்லது தும்மல் காரணமாக இந்த நியுமோகாக்கல் பாக்டீரியாகிருமி தொற்று ஒருவருக்கொருவர் இடையிலான சுவாசத் துளிகளால் பரவுகிறது.


இந்த நியுமோகாக்கல் நிமோனியா நோயினை தடுக்கும் பொருட்டு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியுமோகாக்கல் கான்ஜிகேட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால் கடந்த வாரம் 13.07.2021 அன்று இந்த தடுப்பூசி திட்டம் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நமது தருமபுரி மாவட்டத்தில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியானது 6வது வாரம், 14வது வாரம் மற்றும் ஊக்கத்தவணையாக 9வது மாதங்களில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் தருமபுரி மாவட்டத்தில் 24,000 குழந்தைகள் பயன் பெறுவார்கள். பொது மக்கள் இந்த தடுப்பூசி திட்டத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை நியுமோகாக்கல் பாக்டீரியா கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இம்முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.ஜெமினி, பென்னாகரம் வட்டாட்சியர் திரு.பாலமுருகன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சிவகுரு, தாய் சேய் நல அலுவலர் திருமதி.பார்கவி, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad