பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் கழக நவீன அரிசி ஆலைக்கள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக Paddy Pre cleaner, Mechanical Dryer, Modern Par-boiling unit, Cone polishers, Whiteners, Colour sorter, Storage godown etc.. உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட இம்மண்டலத்தில் உள்ள தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்வது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்தகளுக்கு மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.ந.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக