Type Here to Get Search Results !

மனைவிக்கு கத்தி குத்து; கணவன் கைது.


நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 42). லாரி டிரைவர். இவருடைய மனைவி அரவிந்தா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு ஏற்பட்டது. 


இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு அரவிந்தா பூரிக்கல் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று கிருஷ்ணன் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், மனைவியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies