அரூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.
அரூர் ரவுண்டானாவில் மத்திய அரசை கண்டித்து எல்பிஎப்,சிஐடியு, தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் அமைப்புசாரா தொழிற்சங்கம் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அத்தியவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்பப் பெறவும், பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார் கையில் ஒப்படைப்பதை, மின்சார சட்டத் திருத்தம், மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை கைவிடவும், ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக