Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம்.

தமிழ்நாட்டில் மே மாதம் முதல் வாரத்தில் நாளொன்றுக்கு 26,000 -ஆக இருந்த கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை தமிழ்நாடு அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக குறைந்து தற்போது நாளொன்றுக்கு 2000 நபர்களுக்கும் கீழாக குறைந்துள்ளது. இந்த அரசு பதவியேற்றவுடன் கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு முழுவீச்சில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மருத்துவமனைகளில் கோவிட் படுக்கைகள் அப்போது இருந்த எண்ணிக்கையான 95,211-ல் இருந்து 1,74,829 ஆகவும் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 27,563 -ல் இருந்து 53,689 ஆகவும் மற்றும் தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் 7,154 -ல் இருந்து 10,571 ஆகவும் உயர்த்தப்பட்டது.

சுமார் 3075 மருத்துவர்கள், 5362 செவிலியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள 7,754 சுகாதார பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா பெருந்தொற்று பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இதுவரை, 2 கோடியே 62 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக நோய் தொற்று 2 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்தது. இதனை தொடர்ந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, மக்களின் அன்றாட பணிகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில், மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடக்கமாக நேற்று (31-07-2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார துவக்க விழாவினை காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினை துவக்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் SHARECHAT செயலியினையும் கொரோனா பேட்ஜினையும் வெளியிட்டார்கள். அதன்பின்பு கொரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, LED பொருந்திய வாகனங்களின் மூலம் கொரோனாவிற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு, தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்திட அனைத்து
மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. துண்டு பிரச்சாரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடை வீதிகள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், மாணவர்களுக்கிடையே குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும், கிராம அளவில் / வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசியை செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கொளரவித்து பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு விப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டுள்ளது. பொது மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வும், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விபுணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை வரும் நாட்களில் தரூஉமபுரி மாவட்டம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884