விபத்து பகுதியில் செயல்பட்ட குடிநீர் குழாய்; இடமாற்றம் செய்த எம்எல்ஏ. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

விபத்து பகுதியில் செயல்பட்ட குடிநீர் குழாய்; இடமாற்றம் செய்த எம்எல்ஏ.


அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு ராயப்பன் கொட்டாய் பகுதியில் அரூர்- தீர்த்தமலை முக்கிய சாலையில் கடந்து சென்று பொதுமக்கள் குடிநீர் பிடித்து  வந்தனர். இந்நிலையில் கடந்த சட்டசபை  தேர்தலின் போது அதிமுக சார்பில்  அப்பொழுதைய எம்எல்ஏ சம்பத்குமார் வேட்பாளராக போட்டியிட்டு ராயப்பன் கொட்டாய் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


அப்பொழுது அப்பகுதி பொதுமக்கள் முக்கிய போக்குவரத்து சாலையை கடந்து சென்று குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது இதனால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பான இடத்தில்  குடிநீர் பைப் மாற்றியமைக்க வேண்டும் என  அவரிடம் கோரிக்கை  வைத்தனர். சம்பத்குமார் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் எம்எல்ஏவாக பதவியேற்ற பின் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை சரி செய்வதற்காக நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பான இடத்தில் குடிநீர் பைப் லைன் அமைத்து துவக்கி வைத்தார்.  அப்பொழுது பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad