Type Here to Get Search Results !

கொரோனா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்; பொதுமக்கள் ஏமாற்றம்.

தருமபுரி மாவட்டத்தில் தொய்வின்றி நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது, காரணம் அரசு ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகள் அனைத்து செலுத்தப்பட்டு விட்டதால் மாவட்டத்தில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை.

தருமபுரி மாவட்டத்திற்கு இதுவரை 207,920 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகளும் 35,270 கோவாக்சின் தடுப்பூசிகளும் பெறப்பட்டுள்ளது இதில் 225,457 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகளும் 35,814 கோவாக்ஸின் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது, இருப்பு ஏதும் இல்லை.
தருமபுரி மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது, நமது அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியில் இன்று 1400 தடுப்பூசிகள் 13 முகாம்களில் செலுத்தப்படுகிறது.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழ் நாட்டிற்கு தடுப்பூசிகள் வந்த உடன் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக தடுப்பூசிகள் தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884