Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து.


கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், எந்த நேரமும் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.


கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தற்போது தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 6 ஆயிரத்து 426 கன அடியாகவே உள்ளது.


கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போதைய நீர் மட்டம் 89.62 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6039  கன அடி வருகிற நிலையில் விநாடிக்கு 1426 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிணி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போதைய நீர் மட்டம் 78.71 அடியாக உள்ளது. அணைக்கு 11,628 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் விநாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரத்து 426 கன அடியாக உள்ளது.


எனினும் கர்நாடக மாநில காவேரி கரையோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பொழிய துவங்கியுள்ளது. அதேபோல கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  ஆகவே, எந்த நேரமும் தமிழகத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies