Type Here to Get Search Results !

குடும்ப சண்டை; இரு குழந்தைகளின் தாய் தற்கொலை.

பென்னாகரம் அடுத்த போடூர் போயர் காலனியை சேர்ந்த கார்த்திக். பொக்லைன் இயந்திர ஆபரேட்டர் வேலை செய்கிறார். இவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வாடிக்கை. அதன்படி நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர்கள் பென்னாகரம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணமான 5 ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தருமபுரி மாவட்ட உதவி ஆட்சியர் சித்ரா விஜயன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies