Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு த.வெ.க சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாட பொதுசெயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட செயலாளர் தாபா சிவன் ஆலோசனைப்படி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் செல்வி தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் ஜோதி, மீனா, பவித்ரா, ஜோதி, மகளிர் அணி நகர செயலாளர் சங்கீதா, ஒன்றிய துணை செயலாளர் ஜெயலட்சுமி, செயற்குழு உறுப்பினர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவினை பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார் துவக்கி வைத்து, மகளிர் தினா விழா குறித்து  சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பேசியவர்கள் ஒன்றிய அரசுடன் மறைமுக கூட்டு சேர்ந்து கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் திமுக அரசை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம், பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்ற முதல் அரசியல் கட்சி நமது தமிழக வெற்றி கழகமாகும், மகளிர் தின விழாவில் அன்னை தெரசா,  வீரதமிழ் மங்கை வேலுநாச்சியார், அஞ்சலைஅம்மாள், கல்பனா சாவ்லா ஆகியோருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.


இவ்விழாவில் ஒன்றிய இணை செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் விக்னேஷ் மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies