Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அருகே கரும்பு அரவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை விரல்கள் துண்டாகின.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கணபதி கொட்டாய்கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது38).தொழி லாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாது என்பவரின் வெல்ல ஆலையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கரும்பு அரவை செய்து கொண்டிருந்த எந்திரத்தில் சிக்கி இருந்த கரும்பு சக்கையை கையில் எடுக்க முயன்றார். அப்போது இவரது வலது கை எந்திரத்தில் சிக்கி 3 விரல்கள் துண்டானது. 


வலி தாங்காமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள், சேட்டை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884