Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கி நூற்றாண்டுகளை கடந்துள்ளதை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற நூற்றாண்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கி (1893-2025) நூற்றாண்டுகளை கடந்துள்ளதை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற நூற்றாண்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.02.2025) குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்.


இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் நூற்றாண்டு உறுதிமொழியான ” கல்வி எங்களின் அடிப்படை உரிமை, எங்களின் அடிப்படை உரிமையை எங்களுக்கு உறுதிசெய்தது எங்களின் அரசுப் பள்ளியே, அரசுப் பள்ளியே நம் அடையாளம், அதுவே நம் வழிகாட்டி நம் ஆசிரியர்களே நம் கலங்கரை விளக்கம், அனைவருக்கும் சமத்துவமான கல்வியை சமூக நீதியுடன் உறுதிசெய்த அரசுப்பள்ளியின் வளர்ச்சி என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு, பள்ளியின் வளர்ச்சிக்குத் துணை நிற்பதை உதவியாகக் கருதாமல் நம் கடமையாகக் கருதுவோம், நம் பள்ளியின் மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம், கல்வி என்னும் பயணத்தில் தன்நம்பிக்கையை கனவுகளை சமூகநீதியை, சுதந்திரத்தை நமக்கு அளித்த நம் அரசுப்பள்ளிகளுடன் உடன் நிற்போம் என்று இந்நூற்றாண்டுத் திருவிழாவில் அனைவரும் இணைந்து உறுதியேற்போம்.” ”நம் பள்ளி நம் பெருமை, நம் பள்ளி நம் பொறுப்பு என்ற உறுதிமொழியை வாசிக்க ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பட்டுப்புடைவைகளை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா, முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் திரு.மாது சண்முகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884