மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி மாவட்டத்தில் பல மனிதநேயமிக்க நலத்திட்ட சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் ஆதரவற்று இறந்த புனித உடல்களை தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதற்கு உதவியாக இருந்து வரும் தருமபுரி நகராட்சி பச்சையம்மன் மயானம், ரோட்டரி மின் தகன மையத்தில் பணி செய்து வரும் ஊழியர்கள் பதினொறு நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பத்திர எழுத்தர் கணேசன், தலைமையாசிரியர் தேன்மொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி, கிருஷ்ணன், வள்ளி, சபரி முருகன், பிரேமா ஆகியோர் மயான பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக