Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் அதிமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு.


தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோட்டில்  உள்ள தனியார் மண்டபத்தில்  பாலக்கோடு அதிமுக  தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம்  சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக்  கூட்டம் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களின்  தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு விவசாய பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், டாக்டர் அசோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், தெற்கு  ஒன்றிய கழக செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன் அனைவரையும்  வரவேற்றுப் பேசினார்.


இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள்  அமைச்சர் தங்கமணி எம்.எல் ஏ    கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசும் போது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, திமுக அரசு புறக்கணித்து மக்களை வஞ்சித்து வருவதாக கூறியவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக  200 தொகுதிகள்  வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் எனவும், அப்போது திமுக புறக்கணித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் , புதுர் சுப்ரமணி, வீரமணி, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, தகவல் தெழில்நுட்ப நிர்வாகிகள் கோவிந்தசாமி, அசோக், புஷ்பராஜ், சோமேஷ், கிரிநாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நகர செயலாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884