Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 கிராமங்கள் விடுபட்டதால் பொதுமக்கள் அவதி.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த கொரவாண்டஅள்ளி மற்றும் கெண்டேனஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள கொரவாண்டஅள்ளி,  ஜெலகாபுரம் கிராமத்தில் 500 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தங்களது நிலம் சம்மந்தமாக விற்கவும், வாங்கவும்,  நிலத்தை பத்திர பதிவு செய்ய மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்து வந்தனர்.


ஆனால் கடந்த 5 மாதமாக இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  நிலம் சம்மந்தமான பத்திர பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக  வங்கியில் கடன் பெற தனது நிலத்தை வங்கி பெயரில் பதிவு செய்ய முடியாததால்,  மகளின் திருமணம் செய்ய வழியில்லாமல் தவித்து வருவதாகவும், கடந்த ஒரு மாதமாக சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு நடையாய் நடந்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்தார்.


இதுகுறித்து சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது நிலம் குறித்த ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் போது கொரவாண்டஅள்ளி, கென்டேனஅள்ளி இரண்டு  பஞ்சாயத்துக்களின் எல்லைகளில் உள்ள ஜெலகாபுரம், கொரவாண்ட அள்ளி கிராமத்தின் எல்லை பிரச்சனை காரணமாக ஆன்லைன் பதிவேற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் இப்பிரச்சனை சரி செய்யப்பட்டு பத்திர பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884