Type Here to Get Search Results !

பாலக்கோடு இரயில்வே நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை பேருராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஸ்வச்சபாரத்  திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட  பொதுஇடங்கள்,  வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என  பிரித்து வாங்குவது ஆகியன குறித்து  விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து இன்று பாலக்கோடு இரயில்வே  நிலையத்தில் ஸ்வச்ச பாரத் திட்டத்தின் கீழ்  தூய்மை பணிகளையும், 11 வது வார்டு அண்ணா நகர் அங்காளம்மன் கோயில் முன்பு மரக்கன்றுகளை நடும் பணியினையும் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வேன் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பேருராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், மற்றும் தூய்மை பணியாளர்கள் திராளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies