Type Here to Get Search Results !

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் மை தருமபுரி அமரர் சேவையினர் மூலம் நல்லடக்கம்.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோவிலூர் நிர்மலா முதியோர் இல்லத்தில் 75 வயது மதிக்கத்தக்க பாட்டி கவனியம்மாள் அவர்கள் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார். இன்று மை தருமபுரி அமரர் சேவை மூலம் பாட்டியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டார். 


மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்றோர்கள், ஏழ்மையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் சேவையில் இதுவரை 107 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். பாட்டியை நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹமத் ஜாபர், செந்தில், ஜெயசூர்யா, பிரபு, சண்முகம் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். ஆதரவற்று இருப்பவர்களுக்கு என்றென்றும் உறவாய் மை தருமபுரி அமைப்பினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884