Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.


சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியல் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்வார்கள். 

இந்த நிலையில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து  19ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.  இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்தது.  இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து  வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் அருவிகளில்  தண்ணீர் ஆர்பரித்து  கொட்டியது.


இந்த நிலையில் வார விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர்.பின்னர் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள்  முதலைப்பண்ணை, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். 


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகளில் உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி,பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies