Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

"பொருள் அறிவியலில் நானோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக முன்னாள் மாணவர்களின் விரிவுரை தொடர் வகுப்பு "பொருள் அறிவியலில் நானோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி" என்ற தலைப்பில் நடைபெற்றது, முனைவர் செல்வபாண்டியன் துறைத் தலைவர் இயற்பியல் துறை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், இதற்கு முன்னதாக முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.


முன்னாள் மாணவர் முனைவர் மணிகண்டன் உதவி பேராசிரியர் இயற்பியல் துறை ராமகிருஷ்ணா கல்லூரி திருச்சிராப்பள்ளி அவர்கள் சிறப்பு வகுப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் இறுதியாக முனைவர் பிரசாத் உதவி பேராசிரியர் இயற்பியல் துறை அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.நிகழ்வை முனைவர் கோபால் கிருஷ்ணன் முனைவர் செந்தில் மற்றும்  இயற்பியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884