Type Here to Get Search Results !

குறும்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வன் திட்ட முகாம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே குறும்பட்டி சக்தி முருகன் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வன் திட்ட முகாமை வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் மா. அபுல் சலாம் ஆசாத் ச.இளங்குமரன் தொடங்கி வைத்தனர். இதில் மாம்பட்டி, செல்லம்பட்டி, மத்தியம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மனுக்கள் பெறப்பட்டன.


ஊராட்சி மன்ற தலைவர்கள் கருணாநிதி, அன்பழகன், சங்கீதா ராஜா முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர்கள் பூராஜ், மணிவேலன், சந்தானம். கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், ஜானகி, சரிதா, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தீர்த்தமலை மருத்துவர் தொல்காப்பியன், மருத்துவர் அர்ச்சனா மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) பாரதி அனைத்து துறை அலவலர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies