Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதனை நோக்கமாக கொண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.    

மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்டபம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றது. மேலும் இந்த விருதினை பெறுவதற்கு இந்திய குடிமகனாக  மற்றும் இந்தியாவில் வசிக்கம் 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.   


மேலும் விண்ணப்பித்தினை https:/awards.gov.in என்ற Online portal-ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.   இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியார் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம்.    2024-ம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பித்தினை 31.07.2024-க்குள் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884