Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திரா சார்பில் அதியமான் கோட்டையில் உள்ள மத்திய அரசின் அகில இந்திய வானொலி நிலைய வளாகம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து இன்று தூய்மை யே சேவை திட்டத்தின் அடிப்படையில் அதியமான் கோட்டையில் உள்ள மத்திய அரசின் அகில இந்திய வானொலி நிலைய வளாகம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். சிறப்பு அழைப்பார்களாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன்,கூடுதல் ஆட்சியர்- வளர்ச்சி திருமதி தீபனா விஸ்வேஷ்வரி இ ஆ ப ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் தமிழரசன், அதியமான் கோட்டை ஊராட்சி தலைவர் மாரியம்மாள், பாகலள்ளி ஊராட்சி தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் லீலவினோதன், மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், அதியமான் கோட்டை திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் விக்ரம், தூய்மை இந்தியா திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கணபதி, மக்கள் நலப்பணியாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தூய்மை பணி முகாமில் 50க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக நல்லம்பள்ளி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies