Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அருகே வெள்ளிசந்தையில் திமுகவில் இருந்து விலகி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.MLA முன்னிலையில் இணையும் விழா.



தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் வெள்ளிசந்தை கிராமத்தில் கருக்கனஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சூடப்பட்டி, ஜக்க சமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திமுக உறுப்பிணர்கள் அக்கட்சியிலிருந்து விலகி வெங்கடாசலம் தலைமையில் அதிமுக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இளைஞர்கள், மகளிர், முதியோர் என  100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில்  இணைந்தனர்.

கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசியதாவது. இந்திய அளவில்  2.40 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் 3 வது பெரிய கட்சி என்றும், வரும் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றியை பெற்று திருட்டு திராவிட திமுக அரசு நிறுத்திய மக்கள்  நலத்திட்டங்களான, முதியோர் ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், மடிக்கணிணி, மகளிர்  இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மீண்டும் செயல் படுத்துவோம் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை ராமநாதன், கருக்கனஅள்ளி கிளை செயலாளர் சங்கர், அவைத் தலைவர் மாதையன், மேலவை பிரதிநிதி கண்ணூரான், இளைஞர் பாசறை செயலாளர் மாதுராஜ், நிர்வாகிகள் முல்லை பிரகாஷ், பிரபு, ரவி மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884