Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாரண்டஅள்ளி பேருந்துநிலையத்தில் 47.25 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கடை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருந்து நிலையத்தில் 2022-23 க்கான இயக்கம் மற்றும் பாராமரிப்பு திட்டத்தின் கீழ்   47 இலட்சத்து 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  பேருந்து நிலையத்தில் 6 புதிய கடைகள்  கட்ட  தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள், நிதி  ஒதுக்கீடு செய்தார், அதனை தொடர்ந்து  பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று பேருந்து நிலைய கடைகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி  நேரடியாக ஆய்வு செய்து, கட்டுமான  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார் .


மேலும் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு சென்றவர், கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை விண்ணப்பங்கள் குறித்து கேட்டறிந்து விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு பணியினை விரைவாக முடித்திட பேரூராட்சி பணியாளர்களுக்கு  அறிவுரை வழங்கினார்.


 இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் முருகன், கவுன்சிலர்கள் முனிராஜ், வெங்கடேசன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884