Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

நமாண்டஅள்ளி புது காலணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மனைவி சாவு; கனவர் படுகாயம்.

Top Post Ad


திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி காந்தி (வயது.36) இவரது மனைவி நந்தினி (வயது.32) இவர் ஓசூர் அசோர் லைலாண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திக்சாத் (வயது. 8) மைத்ரேயன் (வயது .6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் நந்தினி குடும்பத்துடன்தாய் வீடான தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள நமாண்டஅள்ளி கிராமத்திற்க்கு வந்தனர். நேற்று காலை  நந்தினி கணவருடன் பால் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். பால் வாங்கி கொண்டு காடுசெட்டிபட்டியில் இருந்து பஞ்சப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நமாண்டஅள்ளி புது காலணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியதில் கனவன் - மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர்.


அருகிலிருந்தவர்கள் இவர்களை மீட்டு பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கனவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies