Type Here to Get Search Results !

சிவாடி பெட்ரோலிய நிறுவனத்தில் கூலி தொழிலாளி திடீர் சாவு.

மாதிரி படம்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சிவாடியில் பெட்ரோலிய நிறுவனம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இங்கு தீவட்டிப்பட்டி பகுதியைச் சார்ந்த கிருஷ்ணன்(54) என்பவர் நேற்று காலை தான் முதன்முதலில் அங்கு கூலி வேலைக்கு வந்துள்ளார். பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானதால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கூலித்தொழிலாளி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies