தொப்பூர் அருகே விஷம் குடித்த முதியவர் சாவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மே, 2022

தொப்பூர் அருகே விஷம் குடித்த முதியவர் சாவு.

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த பட்டகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  வெங்கட்ராமன் (வயது80). இவருக்கு 4 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 

இந்த நிலையில் வெங்கட்ராமன் மகன் சின்னதுரை வீட்டில் இருந்து வந்துள்ளார்., இவருக்கு வயது முதிர்வின் காரணமாகவும் தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட  வெங்கட்ராமன் நேற்று மாலை வீட்டில் விஷம் அருந்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad