Type Here to Get Search Results !

அதியமான்கோட்டை அருகே கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பால ஜங்கமனஹள்ளி ஜங்ஷன் ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது லாரியில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டுனரை விசாரணை செய்ததில் பெருமாள் (45) என்பவர் லாரியின் உரிமையாளர் என்றும் கட்டான் கொட்டாயிலிருந்து ஒட்டப்பட்டிக்கு அனுமதி இன்றி கள்ளத்தனமாக கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்ததை அடுத்து போலீசார்டிரைவர் பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies