Type Here to Get Search Results !

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா.

இளவேனில் பதிப்பகம், தருமபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து மருதம் நெல்லியில் மலர்ந்த மகாத்மா என்ற கவிதைத் தொகுப்பு நூல் தருமபுரி புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்விற்கு கல்லூரி நிர்வாக மேலாளர் ரா கணேஷ் வரவேற்று பேசினார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.  மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சா.எழிலன் முன்னிலை வகித்தனர். 

தகடூர் புத்தகப் பேரவை தலைவர் இரா.சிசுபாலன், தகடூர் புத்தகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் இ.தங்கமணி, சின்னப்பள்ளத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி, மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் செயலாளர் காயத்ரி, இளவேனில் பதிப்பகத்தின் பதிப்பாளர் மா.வசந்தகுமாரி, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் நூல் வெளியீட்டு மற்றும் சிறப்புரை வழங்கினார். நூலின் முதல் பிரதியை உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் கெளரவத் தலைவர் ப.இளங்கோ பெற்றுக்கொண்டார். நிறைவாக ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies